சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை !

நாயுடுபுரம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது, ராம்குமார் என்பவரின் மனைவி வேளாங்கண்ணி, ஜெனிபர் என்பவரின் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜெனிபரிடம் விசாரணை நடத்தியதில், பல உண்மைகள் வெளிவந்துள்ளது. இதனடிப்படையில் நாயுடுபுரம் பகுதியில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த அல்ஹத் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் கஞ்சா மற்றும் போதை காளான் வாங்கி விற்பனை செய்து வந்த அந்தோணி ராகுல் என்பவரையும் கைது செய்தனர். ஏற்கனவே கஞ்சா விற்று குண்டாஸ் சட்டத்தில் ராம்குமார் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version