தமிழகம், புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவும்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு, பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் மூடுபனி நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version