16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில், வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 12-ம் தேதி வடக்கு ஆந்திர கடற்கரை பகுதியில் கரையைக் கடக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவள்ளூர், வேலூர் உள்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும், சென்னையில் அடுத்த இரு தினங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 12-ம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version