தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குமரிக்கடல் முதல் வடதமிழக கடற்கரை வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழைத் தீவிரமடைந்துள்ளதாக கூறினார்.

மேலும், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி, கடலூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் தூத்துக்குடியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மழை தொடரும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version