தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலை நேரங்களில் மூடுபனிக் நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட மலைப்பாங்கான பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version