குடிபோதையில் அரசு பேருந்து நடத்துனர்,தனியார் பேருந்தில் அட்டகாசம்!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் எச்சூர் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர், தனியார் பேருந்தில் ஏறி குடிபோதையில் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக பேசி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார். பின்னர் ஆபத்தான முறையில் பேருந்தின் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்துள்ளார். பயணிகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி, கைகலப்பில் ஈடுப்பட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version