பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை – முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடியில் மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்ற முதலமைச்சர் பழனிசாமி, உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சென்ற முதலமைச்சர் பழனிசாமி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அங்குள்ள பயணியர் விடுதியில் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

தொடர்ந்து மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர், அவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Exit mobile version