பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் நாய் கருத்தடை மையம்!

ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ஏராளமான பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், அப்பகுதியில் நகராட்சி சார்பில் நாய் கருத்தடை மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. இதற்கு அதிமுக நகரமன்ற குழு தலைவர் உமாசங்கரி ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து நகர மன்ற கூட்டத்தில் வலியுறுத்தி இருந்தார். தற்போது இந்த கருத்தடை மையம் கட்டுவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கிய நிலையில், அப்பகுதி மக்களுடன் நகராட்சி அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அதிமுக நகரமன்ற தலைவர், நாய் கருத்தடை மையம் கட்டுவது குறித்தும், 2 கோடி மதிப்பில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நூலகம் அமைக்க நடைபெறும் ஏற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

Exit mobile version