ராஜஸ்தானில் டாக்டர் தம்பதியினர் சுட்டுக்கொலை ; வெளியான சிசிடிவி காட்சி

ராஜஸ்தானில் பட்டப்பகலில் டாக்டர் தம்பதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரத்பூர் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த டாக்டர் தம்பதியை இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்தனர்.

அதில் இருந்து இறங்கிய நபர், டாக்டர் தம்பதியை ஈவு, இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இரட்டைக் கொலையை அரங்கேற்றிய பின்னர், கொலையாளிகள் இருவரும் நிதானமாக இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர்.

இதனிடையே, சிசிடிவியில் பதிவான கொலை தொடர்பான காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

கொலையாளியின் சகோதரி மற்றும் அவரது 6 வயது மகன் கொல்லப்பட்ட வழக்கில் டாக்டர் தம்பதி ஜாமீனில் வந்த நிலையில் பழிக்குபழி வாங்க படுகொலை சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version