புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – நிர்மலா சீதாராமன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். அப்போது, ஆற்காட்டுத்துறை முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து, புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலால் வீடுகளை இழந்தோருக்கு, வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பாதிக்கப்பட்ட மக்களின் நிலை அறிந்து மத்திய அரசு உதவும் என்றும் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Exit mobile version