கஜா புயல் பாதிப்பு குறித்து மக்களை திசைதிருப்ப வேண்டாம்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கஜா புயல் பாதிப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்து மக்களை திசைதிருப்ப வேண்டாம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை – எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கஜா புயல் பாதிப்புகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறினார். பாதிப்புகள் குறித்து பொது மக்களை திசை திருப்பி ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற செயல்களில் சிலர் ஈடுபட செய்வதாக அவர் குற்றம்சாட்டினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையை முதலமைச்சர் அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version