பொறியியல் கலந்தாய்வு குறித்த தவறான செய்திகளை நம்ப வேண்டாம்: தொழில்நுட்ப கல்வி இயக்குநர்

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்விற்கான இணையதள பதிவு சிறப்பாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை 62 ஆயிரத்து 800 மாணவ மாணவிகள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதிவு, சான்றிதழ் சரிபார்ப்பு, விருப்ப பாடம் மற்றும் கல்லூரி தேர்வு ஆகியவை தொடர்பாக இணைய தளத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை ஒரு லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் இந்த இணையதளத்தை பார்வையிட்டு எவ்வித சந்தேகமுமின்றி தங்களது பதிவுகளை செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வு அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும், பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு குறித்த தவறான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version