பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அரசு ஒதுக்கீட்டில் பி.இ, பி.டெக்., இடங்களை நிரப்ப அண்மையில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் தேர்வு செய்தது போக மீதி இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்ப துணை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களோடு, பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று துவங்கி வரும் 24ம் தேதி வரை துணை கலந்தாய்விற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version