20 ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இறுதி வாய்ப்பு

2000-ம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து இதுவரை தேர்ச்சி பெறாமல் இருக்கும் நபர்கள், வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் தேர்வுகளின் போது, தேர்வு எழுத இறுதி வாய்ப்பு வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சிறப்புத் தேர்வை எழுத அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இன்று முதல் மார்ச் 23-ம் தேதி வரை சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version