பி.இ.படிப்பிற்கான பொதுப் பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் படிப்பிற்கான பொதுப் பிரிவுகளுக்கான முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் வீட்டிலிருந்தபடியோ அல்லது தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 46 உதவி மையங்களுக்குச் சென்றோ கலந்தாய்வில் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நான்கு சுற்றுகளாக நடைபெறும் ஆன்லைன் கலந்தாய்வில், முதல் சுற்றில் இடங்களைத் தேர்வு செய்ய இன்று முதல் 10 ஆம் தேதி வரை மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய ஆன்லைன் கலந்தாய்வில், தரவரிசை 1 முதல் 9 ஆயிரத்து 872 வரை உள்ள மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதல் சுற்று மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு விவரம் ஜூலை 11 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், அதை 11,12 ஆகிய இரு தினங்களில் மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஜூலை 28 ஆம் தேதி இறுதி ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version