மீ டூ மூலம் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது – மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

மீ டூ மூலம் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்று, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பாஜக சார்பில் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன். ராதாகிருஷ்ணன், உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுவதாக கூறினார்.

மீ டூ மூலம் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்று தெரிவித்த அவர், இதனால் ஏற்படும் இழப்பை சரி செய்ய முடியாது என்றார். கமல், விஜய்க்கு பாஜகவில் இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

Exit mobile version