வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும் : பொன் ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தோவாளைப் பகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரபலமான தோவாளை மலர் சந்தையில், மலர் பதப்படுத்தும் நிலையம், வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். கன்னியாகுமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரப்பர் ஆராய்ச்சி நிலையமும் விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் 22 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version