தொகுதியை பற்றி ஏபிசிடி கூட தெரியாத கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் : பொன்.ராதாகிருஷ்ணன்

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சூறாவளி பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் எந்த இடத்திலும் சூறாவளியை காணவில்லை என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். நாகர்கோவிலில் பிரசாரத்தில் ஈடுபட்ட குமரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன், கமல்ஹாசன், முதலில் தனது மக்கள் நீதி மய்யத்தை வளர்க்கும் விஷயத்தை கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தொகுதியை பற்றி ABCD கூட தெரியாத வசந்தகுமாரை வேட்பாளராக அறிவித்துள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சி தொகுதி மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும், அவரால் குமரிக்கு அவமானம் எனவும் குற்றம் சாட்டினார்.

வர்த்தக துறைமுகம் வரவிடமாட்டேன் என்று கூறிய வசந்தகுமார், தற்போது துறைமுகத்திற்கு தான் எதிரானவன் இல்லை என்று கூறுவதாகவும், குமரியில் உள்ள 20 லட்சம் மக்களையும் அவர் ஏமாற்றுவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் மேலும் கூறினார்.

Exit mobile version