அதிமுகவுடன் இணைந்து திமுக-காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்போம்: பொன்.ராதாகிருஷ்ணன்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்போம் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் ஆதரவு தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு, பாஜக முழு ஒத்தழைப்பு அளிக்கும் என்றார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்து, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்போம் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Exit mobile version