சுயேட்சை வேட்பாளர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர்

திண்டுக்கல் நத்தம் பகுதியில் திமுகவினர் அத்தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அன்புரோஸ் மீது தாக்குதல் நடத்தி வெறிசெயலில் ஈடுபட்டனர்.

திமுக சார்பில் மக்களவை தொகுதி வேட்பாளர் வேலுச்சாமி போட்டியிடுகிறார். இந்த நிலையில் இவரை ஆதரித்து நத்தம், கோபல்பட்டி, சந்தை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெற்று நத்தம் பேருந்து நிலையத்தில், ஆட்டோ சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் அன்புரோஸ் ஆதரவாளர்களுடன் பிரசாரம் செய்து வந்தார். இந்த நிலையில் உதய நிதி ஸ்டாலினை காண வந்த திமுகவினர் அவரது பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புரோஸை கடுமையாக தாக்கினர்.

Exit mobile version