திமுக அராஜக செயலில் ஈடுபட்டாலும்,அதிமுக மகத்தான வெற்றியை பெரும் !

சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஈரோட்டில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்களை திமுக நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு பிரியாணி மற்றும் ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக புகாரளித்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், வாக்காளர்களை கலந்துகொள்ள விடாமல் பிரியாணியும், ஆயிரம் ரூபாயும் கொடுத்து தடுக்க முயன்றதாக திமுகவினர் மீது குற்றம்சாட்டினார். மேலும் திமுக எத்தனை அராஜக செயல்களில் ஈடுபட்டாலும், அதிமுக மகத்தான வெற்றிபெறும் என அவர் தெரிவித்தார்.

Exit mobile version