திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகை

காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகனை கைது செய்ய வலியுறுத்தி, தேமுதிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களாக, நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவின் கூட்டணிப்பேச்சுவார்த்தை குறித்து நாகரிகமற்ற முறையில் திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் துரைமுருகனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் காட்பாடியில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தமுயன்றனர். அப்போது காவல்துறையினர் தேமுதிகவினரை தடுத்து நிறுத்தியதால் வேலூர் – காட்பாடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Exit mobile version