ஊராட்சி பணத்தை கையாடல் செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்!

மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட புத்திரன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் நிர்மல் குமார். இவர் ஊராட்சி மன்ற தலைவராகவும்,திமுகவின் சித்தாமூர் ஒன்றிய துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்தநிலையில் நிர்மல்குமார் தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஊராட்சிக்கு சொந்தமான 23 லட்சம் ரூபாயை கையாடல் செய்ததாகவும், வீடு வழங்கும் திட்டத்தில் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக செங்கல்பட்டு ஆட்சியரிடம் புகார் மனு அளித்த நிலையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Exit mobile version