உயர்நீதிமன்ற தடையை மீறி பேனர்கள் வைத்த திமுக பிரமுகர்

பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திமுக பிரமுகர் இல்லத் திருமணத்திற்கு தடையை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அரசியல் கட்சியினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை ஏற்று அரசியல் கட்சியினர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர். இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம் மகளின் திருமண விழாவிற்காக ஓட்டன்சத்திரம் – தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தடையை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை மறந்து திமுகவினர் பேனர் வைத்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.

Exit mobile version