முதல்வர் முன்னிலையில் திமுகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

எடப்பாடியில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் திமுகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி வருகை தந்தார். இதையடுத்து, தனது குடும்பத்தினருடன் பாலமுருகன் கோயிலில் முதலமைச்சர் சாமிதரிசனம் செய்தார். அதனைதொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினர்.

அப்போது பூலாம்பட்டியைச் சேர்ந்த திமுக முன்னாள் கவுன்சிலர் போட் மணி உள்பட 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

Exit mobile version