தேர்தல் விதிமுறையை தொடர்ந்து மீறும் திமுக

செல்லும் இடமெங்கிலும் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபடுவதாக உதயநிதி ஸ்டாலின் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தேர்தல் விதிமுறைகளை மீறி, தனது பிரசார வாகனத்தின் முன்பும் பின்பும் ஏராளமான வாகனங்களுடன் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே, நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் தனது பிரசார வாகனத்தை 30க்கும் மேற்பட்ட கார்கள் புடைசூழ வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனால் செங்கோட்டை தாலுகா அலுலவக சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஒருவழிப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

Exit mobile version