News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

துருபிடித்து "சைலன்ட் மோடில் ஸ்மார்ட் பைக் திட்டம்"

Web Team by Web Team
December 14, 2021
in Top10, TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
துருபிடித்து "சைலன்ட் மோடில் ஸ்மார்ட் பைக் திட்டம்"
Share on FacebookShare on Twitter

சென்னை மாநகராட்சியில், மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற ஸ்மார்ட் பைக் திட்டம், தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு காணாமல் போயுள்ளது… ஸ்மார்ட் பைக்குகள் பராமரிப்பு இன்றி பழுதாகி இருப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், திமுக அரசின் காழ்ப்புணர்ச்சியால், சைலன்ட் மோடில் போடப்பட்டுள்ளது இந்த திட்டம்.

போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சென்னை மாநகராட்சியில், மக்களின் பயணங்களை எளிதாக்கும் வகையில், அண்ணா திமுக ஆட்சியில், ஸ்மார்ட் பைக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியும், மிதிவண்டியைப் பகிரும் தனியார் நிறுவனமும் இணைந்து, சென்னையின் பல்வேறு இடங்களில் மக்களுக்கான சேவையை அளித்து வந்தன. குறிப்பாக, மெட்ரோ ரயில் நிலையங்கள், மெரினா கடற்கரை மற்றும் பல இடங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு, மக்களின் பயணம் எளிதாக்கப்ட்டது.

image

சென்னை வாசிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த ஸ்மார்ட் பைக் திட்டம் மூலம், ஐ.டி ஊழியர்கள் மற்றும் பிற துறை பணியாளர்களும் அதிகமாக பயனடைந்து வந்தனர்.

இதன் விளைவாக, 100 ஸ்மார்ட் பைக் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஆயிரத்து 500 ஸ்மார்ட் பைக்குகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. மக்களின் ஆரோக்கியத்திலும் இந்த ஸ்மார்ட் பைக்குகள் அதிக பயனை தந்ததால், இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த அண்ணா திமுக அரசு திட்டமிட்டது.

ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த திட்டம் கானல் நீராக மாறிவிட்டது. அண்ணா திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதாலேயே, இந்த திட்டத்தை கண்டு கொள்ளாமல் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.

தற்போது, பல நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் பைக்குகள் காணாமல் போய் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் அண்மையில் பெய்த கனமழையால், இந்த ஸ்மார்ட் பைக்குகள் துருபிடித்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக, பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மக்களின் ஆரோக்கியத்தையும், போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு, தொலைநோக்கு பார்வையுடன் அண்ணா திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வேண்டுமென்றே திமுக அரசு கைவிட்டுள்ளது.

தனது ஆரோக்கியத்திற்காக அவ்வவ்போது மிதிவண்டியில் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லையா எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்தை புதுப்பித்து, பழுதாகி நிற்கும் ஸ்மார்ட் பைக்குகளை முறையாக பராமரித்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்பதே, சென்னை வாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது…

Tags: AbandonChennaiDMKAtrocitiesDMKGovtnewsjSmart BikeTNGovernment
Previous Post

"ஹைட்ரோ கார்பன் திட்டம்" – மவுனம் காக்கும் திமுக அரசு

Next Post

முன்னறிவிப்பின்றி குடிசை பகுதிகளை இடித்த திமுக அரசு

Related Posts

சென்னைத் தீவுத் திடலில் ராட்டினத்தின் போல்ட் கழன்று விழுந்ததில் விபத்து!
தமிழ்நாடு

சென்னைத் தீவுத் திடலில் ராட்டினத்தின் போல்ட் கழன்று விழுந்ததில் விபத்து!

January 27, 2023
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் ₹280 உயர்வு!
தமிழ்நாடு

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் ₹280 உயர்வு!

January 26, 2023
கொலை மிரட்டல் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
தமிழ்நாடு

கொலை மிரட்டல் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

January 26, 2023
குடியரசுத் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்!
தமிழ்நாடு

குடியரசுத் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்!

January 26, 2023
விடியா அரசின் விளம்பர நிகழ்சியால் போக்குவரத்து நெரிசல்!
தமிழ்நாடு

விடியா அரசின் விளம்பர நிகழ்சியால் போக்குவரத்து நெரிசல்!

January 26, 2023
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டம்!
தமிழ்நாடு

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டம்!

January 25, 2023
Next Post
முன்னறிவிப்பின்றி குடிசை பகுதிகளை இடித்த திமுக அரசு

முன்னறிவிப்பின்றி குடிசை பகுதிகளை இடித்த திமுக அரசு

Discussion about this post

அண்மை செய்திகள்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

January 27, 2023
16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

January 27, 2023
சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

January 27, 2023
தொண்டர்களை அடித்து விளாசி தள்ளிவிட்ட அமைச்சர் கே.என்.நேரு!

தொண்டர்களை அடித்து விளாசி தள்ளிவிட்ட அமைச்சர் கே.என்.நேரு!

January 27, 2023
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு ஸ்டாலினின் நெற்றியில் அறைந்ததுபோல உள்ளது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு ஸ்டாலினின் நெற்றியில் அறைந்ததுபோல உள்ளது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

January 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist