தேர்தலில் பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுவது திமுக : அமைச்சர் சி.வி. சண்முகம்

தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக செயல்படுத்த முடியாத திட்டங்களை அறிவித்து, மக்களை ஏமாற்றிவருவது தி.மு.க.தான் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளையொட்டி விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில், பாக்கம் கூட்ரோட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கலந்து கொண்டு, 3 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களுக்காக தொடங்கப்பட்ட ஒரே இயக்கம் அதிமுகதான் என்றும், சாதாரண கிளைக்கழகச் செயலாளர் கூட முதலமைச்சர் ஆகலாம் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version