திமுகவில் தலைவிரித்தாடும் சாதி கொடுமைகள்.. சேலத்தில் என்னதான் நடந்தது?

திமுகவில் தலைவிரித்தாடும் சாதிய பாகுபாட்டை கண்டித்து பேசிய அக்கட்சியை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் சேலம் மாநகர அவைத்தலைவராக உள்ள கே.ஆர்.முருகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அக்கட்சி நிர்வாகி ரகுபதி என்பவரை அவரது சமூகத்தின் பெயரை சொல்லி இழிவாக பேசிய ஆடியோ வெளியானது. இந்த நிலையில் சேலம் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திமுகவின் முன்னாள் மாநகர துணை செயலாளரும், 43வது கோட்ட மாமன்ற உறுப்பினருமான குணசேகரன், திமுகவில் தலைவிரித்தாடும் சாதிய பாகுபாட்டிற்கு கண்டனம் தெரிவித்தார். அப்போது திமுகவின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரனின் ஆதரவாளர்களுக்கும், குணசேகரனின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜேந்திரனின் ஆதரவாளர்கள் குணசேகரனை தாக்கி வலுக்கட்டாயமாக கூட்டத்திலிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டம் நடைபெற்ற பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.

Exit mobile version