திமுக பிரமுகருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24 மணிநேர மதுவிற்பனை ’ஜோர்’! தட்டிக்கேட்பதால் மிரட்டப்படும் மக்கள்!

wine sales by dmk candidate

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே திமுக பிரமுகருக்கு சொந்தமான தோட்டத்தில் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறும் நிலையில், தட்டிக் கேட்கும் மக்களுக்கு மிரட்டல் விடுக்கும் நிகழ்வு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கொடைரோடு அருகே உள்ள ஜெ.ஊத்துப்பட்டியைச் சேர்ந்த திமுக மாவட்ட பிரதிநிதி தெய்வேந்திரன் என்பவரது தோட்டத்தில், 24 மணி நேரமும் மதுவிற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள், தோட்டத்திற்கே சென்று, மதுவிற்கக்கூடாது என கூறிய நிலையில், உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என திமுக மாவட்ட பிரதிநிதி தெய்வேந்திரன் திமிருடன் பேசி வாக்குவாத்தத்தில் ஈடுபட்டுள்ளார் . இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version