இழிவான சொற்களை பேசி தாக்கி கொண்டதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள்

அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களின் குறைகளை கேட்பதற்காக ராமநாதபுரம் புறநகர் கிளை அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மத்திய சங்கத் தலைவர் முருகன், பொதுச் செயலாளர் பச்சைமால் உள்ளிட்டோர் வந்திருந்தனர். அப்போது புறநகர் கிளைச் செயலாளர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள், மத்திய சங்க நிர்வாகிகளை வழிமறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் இருதரப்பினருக்கும் இடையே அடிதடி தகராறு ஏற்பட்டது. மேலும், திமுகவைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகளும் இரண்டு பிரிவாகப் பிரிந்து பொதுவெளியில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டு, ஆபாசமான வார்த்தைகளால் பேசி தரையில் உருண்டு புரண்டு மோதிக்கொண்ட சம்பவத்தில் அங்கிருந்த பொதுமக்கள் தலைதெறிக்க ஒடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Exit mobile version