தி.மு.கவுடன் சேர்ந்து தினகரன் அதிமுகவை கவிழ்க்க நினைக்கிறார்- அமைச்சர் தங்கமணி

தி.மு.கவுடன் டி.டி.வி தினகரன் கைகோர்த்துக் கொண்டு அதிமுகவை அழிக்க நினைப்பது நடக்காத காரியம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பத்திர பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்கள் டி.டி.வி தினகரன் குடும்பம் என்று குற்றம்சாட்டினார். டி.டி.வி தினகரன் அணியினர் திமுகவுடன் கைகோர்த்து, அதிமுகவை கவிழ்க்க நினைப்பதாகவும், அது ஒருபோதும் நடக்காது என்றார். ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்தது என்ற சரித்திரத்தை நிகழ்த்தி காட்டியவர் ஜெயலலிதா என்றும் அவருக்கு துரோகம் செய்தவர்கள், ஆட்சியைப் பிடிக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

 

Exit mobile version