மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றம் – முத்துகிருஷ்ணனுக்கு பதிலாக அரூர் ஆய்வாளர் லட்சுமி நியமனம் 

தர்மபுரியில் பிளஸ் 2 மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வந்த, விசாரணை அதிகாரி மாற்றப்பட்டார்.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி, சதீஷ் மற்றும் ரமேஷ் ஆகியோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தலைமறைவான சதீஷ் மற்றும் ரமேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வந்தநிலையில், சதீஷ் கைது செய்யப்பட்டார். இன்று 2 ஆவது நபர் ரமேஷும் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்தநிலையில், வழக்கை விசாரித்து வந்த கோட்டப்பட்டி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அரூர் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

Exit mobile version