துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு

மக்களவை, இடைத்தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2 நாட்களாக அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதனடிப்படையில் இன்று, நாகை மாவட்டம் செம்பனார் கோயில் பகுதியில் மயிலாடுதுறை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசை மணி, நாகை மக்களவை தொகுதி தாழை சரவணன் ஆகியோரை ஆதரித்து,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர வாக்கு சேரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், மக்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றி தரக்கூட்டிய ஆட்சி அதிமுக ஆட்சி என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version