டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை: சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சலினால் எந்த உயிரிழப்பும் ஏற்படாதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மருத்துமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு என தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், காய்ச்சல் ஏற்பட்டால் பொது மக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Exit mobile version