காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு டெல்டா விவசாயிகள் வரவேற்பு

காவிரியிலிருந்து தமிழகத்திற்கான நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருப்பதற்கு டெல்டா பாசன விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் காவிரியில் இருந்து நீரை திறந்துவிட கர்நாடகா மறுக்கும் பட்சத்தில் அம்மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகளின் நிர்வாகத்தை காவிரி மேலாண்மை ஆணையமே ஏற்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version