தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய திமுக – த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியை சேலத்தில் அவரது இல்லத்தில் சந்தித்தார். ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தமாகா சார்பில் தேர்தல் களப்பணி மேற்கொள்ளும் 187பேர் அடங்கிய தேர்தல் பணி குழு நிர்வாகிகளின் படிவத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றியதால் மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர் என தெரிவித்தார். இதனை வருகின்ற தேர்தலில் மக்கள் எதிரொலிப்பார்கள் என்றும் அதன்படி அதிமுக வேட்பாளர் முழுமையான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்றும் கூறினார்.

Exit mobile version