அதிமுக தமாகாவும் ஒத்த கருத்துடன் செயல்படுகிறது – ஜி.கே வாசன்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவேரா திருமகன் காலமானதை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது. தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் வியூகம் குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை தமாக தலைவர் ஜி.கே.வாசன் சென்னை பசுமை வழிசாலையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக இன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் பெஞ்சமின் உள்ளிட்டோர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினர். அப்போது தேர்தல் வியூகம், முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Exit mobile version