அதிமுகவின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு

தற்போதையை அரசியல் சூழல், எதிர்கால நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை கருத்தில் கொண்டு, கூட்டணியின் முதன்மைக் கட்சியான அதிமுகவின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அதிமுகவின் விருப்பத்தை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். எனவே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப்பணியாற்றி, கூட்டணி கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கும், கூட்டணிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version