சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீது விவாதம்

சட்டப்பேரவையில் இன்று எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதிக்கப்படுகிறது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. முதல் நாளில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் மீது விவாதம் நடைபெற்றது. நேற்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று
எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதிக்கப்படுகிறது.

 

Exit mobile version