தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது 3-வது நாளாக விவாதம்

தமிழக அரசின் 2019-20ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மீது 3-வது நாளாக இன்றும் சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற உள்ளது.

இன்று காலை 10 மணிக்கு அவை கூடியதும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து பேச உள்ளனர். இதனிடையே சட்டப்பேரவையில் கொண்டுவரப்படும் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கும் அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர். இதனையடுத்து நடைபெறும் தமிழக அரசின் 2019-20ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

Exit mobile version