"50கோடி சொத்துக்காக தாயைக் கொன்ற மகள்"

கர்நாடகாவில் தாயின் கணவனை காதலனாக்கி, கைக்குள் போட்டுக்கொண்டு, சொத்தை அபகரிப்பதற்காக காதலனை வைத்தே தாயைக் கொலை செய்த மகளை போலீசார் கைது செய்துள்ளனர். கட்டுப்பாடற்ற வாழ்க்கைமுறை கொலை வரைக் கொண்டு செல்லும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக உள்ளது.

கர்நாடக மாநிலம் ஆனேக்கல் அடுத்த ஜிகினி பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி. கோடீஸ்வரியான அர்ச்சனா ரெட்டி, சில தினங்களுக்கு முன், எலக்ட்ரானிக் சிட்டி சாலையில் 2 மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இருசக்கரவாகனத்தால் காரில் மோதிய மர்ம நபர்கள், அர்ச்சனா ரெட்டி காரை விட்டு இறங்கியதும் சரமாரியாக வெட்டி கொன்ற வீடியோ காட்சி வெளியாகி வைரலானது.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், கொலையில் தொடர்புடைய பிரபல ரவுடி நவீன் மற்றும் அவரது கூட்டாளியான சந்தோஷைக் கைது செய்து விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.

கைது செய்யப்பட்ட நவீன், அர்ச்சனா ரெட்டியின் 3வது கணவராவார். அர்ச்சனா ரெட்டி முதலில் அரவிந்த் ரெட்டி என்பவரை திருமணம் செய்து அவர்களுக்கு யுவனிகா என்னும் பெண் உள்ளார்.

பின்னர் அவரை விட்டு விலகி, 2வது திருணம் செய்த அர்ச்சனா அவருக்கும் டாட்டா காட்டியுள்ளார். இதன் பின்னர்தான் ரவுடி நவீனை காதலித்து 3வது திருமணம் செய்துள்ளார்.

வண்டுக்கு வண்டு தாவும் மலராக இருந்த அர்ச்சனாவின் நடவடிக்கைகள், அவருடனேயே இருந்து வரும் ஆசை மகள் யுவனிகாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும், சொகுசு வாழ்க்கையை கைவிடமுடியாமல் தவித்தவருக்கு அம்மாவின் பெயரில் உள்ள 50கோடி ரூபாய் சொத்து கண்ணை உறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அர்ச்சனா ரெட்டியின் பார்வை, 4வதாக வேறு ஒருவர் மீது விழுந்துள்ளது. இதனைக் கவனித்த யுவனிகா, அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு நவீனுக்கு வலை விரித்துள்ளார்.

ரெட்டை மாட்டுவண்டி சவாரிக்கு ஆசைப்பட்ட நவீனும், யுவனிகாவிடம் சபலம் கொள்ள, தாயாரின் 4வது வண்டு கதையை நவீனிடம் கூறியுள்ளார்.

மேலும் அர்ச்சனா இறந்துவிட்டால், வாரிசு என்ற முறையில் சொத்து முழுவதும் தனக்கு வந்துவிடும், அதை வைத்து இருவரும் சந்தோஷமாக வாழலாம் என்று ஆசைத் தூண்டிலை வீசி கொலைத்திட்டத்தை அரங்கேற்றியுள்ளார் யுவனிகா. இதற்கு ஒத்துக்கொண்டபின்னர் தான், கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

விசாரணையில் கிடைத்த தகவல்களைக் கொண்டு யுவனிகா, நவீன், சந்தோஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Exit mobile version