பல்லாவரம் நகராட்சியில் கொரோனா தடுப்பூசித் திருவிழா

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக அரசு மாநிலம் முழுக்க தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தியும் வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை அடுத்த பல்லாவரம் நகராட்சியில் மெகா கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. பல்லாவரம் நகராட்சி ஆணையாளர் மதிவாணன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த தடுப்பூசி திருவிழாவில், மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மாவட்ட திட்ட இயக்குனர் உள்ளிட்ட கலந்து கொள்ள இருக்கின்றனர். 

மே 21ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படவிருக்கும் நிலையில், இன்று 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version