ராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார்: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு

ராகுல் காந்தியே காங்கிரஸின் தலைவராக நீடிப்பார் என காங்கிரஸ் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்குப்பின், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் மற்றும் மூத்த காங்கிரஸ் உறுப்பினர் ஏ.கே.அந்தோணி உட்பட பலரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி பதவி விலக முன்வந்தார் என்றும், ராகுல் காந்தியின் முடிவை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிராகரித்தது என்றும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் நிர்வாகத்தை மாற்றியமைக்க ராகுலுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version