நாகை: புயலில் கால்நடைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு, நிவாரண உதவிகள்

நாகை மாவட்டத்தில் கஜா புயலில் கால்நடைகளை இழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

அண்மையில் கரையை கடந்த கஜா, நாகையை புரட்டிப்போட்டது. பெரும் சேதத்தில் இருந்து மீள நடவடிக்கை எடுத்துவரும் அரசு சார்பில் நாகையில் கால்நடை இழப்பீடு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், ஓ.எஸ். மணியன், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று 23 பயனாளிகளுக்கு இந்த நிவாரண உதவிகளை வழங்கினர். இதில், பயனடைந்த தி.மு.க.வினர் உள்ளிட்ட பலரும் அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Exit mobile version