புதுக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு, நகைகள் கொள்ளை

புதுக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை பொன்நகரைச் சேர்ந்த சாவித்திரி மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி உள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த மகள் லோகபிரியா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து சாவித்திரி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியோடு தடயங்களை சேகரித்தனர்.

இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை அவர்கள் தேடி வருகின்றனர்.

Exit mobile version