இளம்பெண்களைக் கட்டியணைத்து முத்தமிட்டு அநாகரீகமாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் துவங்கிய நாள் முதல் திமுக.,வேட்பாளர்கள் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் செய்யும் அட்டாகாசங்களுக்கு அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட லியோனி பெண்களின் இடுப்பு குறித்து பேசியதும், ஆ.ராசா தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பேசியதும் பெண்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கடும் அதிருப்தியடைய செய்துள்ளது.

செல்லுமிடமெல்லாம் ஆபாச பேச்சு, கட்டப்பஞ்சாயத்து, மின்சார திருட்டு என அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் திமுக வேட்பாளர்களில் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளரான பையா கவுண்டர் ஒரு படி மேலே சென்றுவிட்டார் என்றால் மிகையாகாது.

பையா கவுண்டர் கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து ஒரு வீட்டில் இருந்த முதல் வாக்காளரான கல்லூரி மாணவி ஒருவரை பார்த்து யாருக்கு வாக்களிப்பாய் எனக் கேட்டார். அப்போது செய்வதறியாது திகைத்த அந்த மாணவி உங்களுக்கு தான் ஐயா என்று கூறினார்.

இதனை தொடர்ந்து யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக அந்த வேட்பாளர் மாணவியின் கையை பிடித்து முத்தமிட்டார். இதனால் அப்பகுதி மக்கள் உட்பட திமுக தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இளம் பெண்கள் கட்டியனைத்து வாக்கு சேகரிப்பது, கைகளில் முத்தமிடுவது போன்ற செயல்களில் இவர் ஈடுபட்டு வருவதால் கவுண்டம்பாளையம் தொகுதி மக்கள் பையா கவுண்டர் மீது அதிருப்தியடைந்துள்ளனர்.

Exit mobile version