முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், உடலநலக் குறைவு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது.

தனது தாயாரின் இறுதிச் சடங்கை செய்வதற்காக முதலமைச்சர் பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள சிலுவம்பாளையத்தை வந்தடைந்தார். தனது தாயாருக்கு முதலமைச்சர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயம்மாளின் உடலுக்கு, அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Exit mobile version