தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பரவல் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அரசு ஆலோசகர் சண்முகம், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டார். மேலும், தற்போது மார்ச் மாதம் முதல் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், இந்தியாவிலேயே அதிகளவில் RT-PCR பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலம் தமிழ்நாடு என தெரிவித்தார்.

 

Exit mobile version