ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்றுப்பயணம்!

கொரோனா பாதிப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தென் மாவட்டங்களின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வரும் 21-ம் தேதி மதுரையிலும், 22-ம் தேதி ராமநாதபுரம் மற்றும் அன்று மதியம் தூத்துக்குடியிலும், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து 23-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலும், அன்று மதியம் விருதுநகரிலும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அன்றோடு சுற்றுப்பயணத்தை முடித்து சேலம் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இம்மாத இறுதிக்குள் சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

Exit mobile version